Home உலகம் இது தான் எங்களது இலக்கு… இஸ்ரேல் பிரதமரின் அதிரடி அறிவிப்பு

இது தான் எங்களது இலக்கு… இஸ்ரேல் பிரதமரின் அதிரடி அறிவிப்பு

0

ஹமாஸ் (Hamas) அமைப்பினரால் இஸ்ரேல் (Israel) நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்வதுதான் எங்களது இலக்கு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu)  தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், பலஸ்தீனம் (Palestine) மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், எதிர்காலத்தில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஆதரவு 

பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா தினந்தோறும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதி எல்லையில் உள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடத்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்களுடைய போர் இலக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா போர் நிறுத்தம்

பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அரசியல்- பாதுகாப்பு மந்திரிசபை தங்களது போர் இலக்கை புதுப்பித்துள்ளது.

நாட்டின் வடக்குப் பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவது என்பதை போர் இலக்கில் சேர்க்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா, லெபனானின் தெற்கில் உள்ள எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் வலியுறுத்தும் அதே வேளையில், காசா போர் நிறுத்தம் ஏற்பட்டால் எங்களது தாக்குதல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/benjamin-netanyahu-announces-updated-war-1726598945

NO COMMENTS

Exit mobile version