நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்(Easter Sunday attack) பின்னர் இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்த புத்தகங்கள் மற்றும் படைப்புகளுக்கு தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானமானது புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு அமைச்சகமும் இந்த தடையை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி தடை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டிற்குள் மதப் படைப்புகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மதங்கள் தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்கள் மற்றும் படைப்புகளை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்க அநுர அரசு தீர்மானித்துள்ளது.