Home இலங்கை சமூகம் அம்மா மன்னித்துவிடுங்கள்…! 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி

அம்மா மன்னித்துவிடுங்கள்…! 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி

0

கொழும்பில் (Colombo) உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என தெரிய வந்துள்ளது

இந்நிலையில், அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்

அதில், “அம்மா என்னை மன்னித்துவிடுங்கள், நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.

நான் எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்…” என்று எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version