Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து : பல மாணவர்கள் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து : பல மாணவர்கள் காயம்

0

பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியின் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

காவல்துறையினர் விசாரணை

இந்தநிலையில், அவர்களில் சிலர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, 13 பாடசாலை மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் பெலியத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version