Home இலங்கை குற்றம் ஹரக் கட்டாவை கொல்ல பத்திரிகையாளராக மாறுவேடம்: வெளியான பரபரப்பு வாக்குமூலம்

ஹரக் கட்டாவை கொல்ல பத்திரிகையாளராக மாறுவேடம்: வெளியான பரபரப்பு வாக்குமூலம்

0

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவில் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட ‘பஸ்தேவா’ எனப்படும் தெமிந்த திசாநாயக்கவை,எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹா தலைமை நீதவான் நேற்று (07) உத்தரவிட்டுள்ளார்.

440 கிராம் ஹெரோயின் மற்றும் 84 மி.மீ துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 09 தோட்டாக்களை வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான பகுப்பாய்வாளர் அறிக்கைகள் மற்றும் பிற விசாரணை அறிக்கைகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்பிரிவுக்கு கடந்த 7 ஆம் திகதி உத்தரவிடப்பட்டது.

இதன்படி,பி அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பித்த அதிகாரி, இந்த சந்தேக நபர் ஹரக் கட்டா என்ற பாதாள உலகக் கும்பல் உறுப்பினரைக் கொல்ல ஒரு நபரை பத்திரிகையாளராகப் பயன்படுத்தியதாகவும்,திட்டத்தின் முக்கிய புள்ளியாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றங்களுடன் தொடர்பு

இந்த சந்தேகநபருக்கு பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், இது தொடர்பாக வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் துஷார விஜேசிங்க, இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக சந்தேகநபர் இன்னும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவில்லை என்றும், தொடர்புடைய ஆய்வாளர் அறிக்கை மற்றும் பிற விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஏனைய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக இந்த வழக்கில் உண்மைகளை முன்வைப்பது பொருத்தமானதல்ல என்றும், வெளிநாட்டு கடவுச்சீட்டு தொடர்பாக உண்மைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அந்த அறிக்கைகள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர் கூறினார்.

இதற்கமைய,முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு, சந்தேகநபரை இந்த மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version