Home இலங்கை சமூகம் கண்டிப்பான நிபந்தனைகள்! உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு வழங்க அரசாங்கம் திட்டம்

கண்டிப்பான நிபந்தனைகள்! உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு வழங்க அரசாங்கம் திட்டம்

0

இலங்கையில் கஞ்சாப் பயிர்ச்செய்கைத் திட்டத்தின் அடுத்த கட்டமாக உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

மருத்துவ மற்றும் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் கஞ்சாப் பயிர்ச்செய்கைத் திட்டத்தின் அடுத்த கட்டமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே தெரிவு

அவர் மேலும் தெரிவிக்கையில், திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில், முதலீட்டுச் சபையினால் விதிக்கப்பட்ட கண்டிப்பான நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டன.

மொத்தம் ஏழு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இத்திட்டத்திற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, அடுத்த ஆண்டு முதல் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் அங்கீகாரம்

அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்கள், கஞ்சாவின் இலைகள், பூக்கள் மற்றும் பிற தாவரப் பாகங்களை ஏற்றுமதி செய்ய அரசாங்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

இந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அது மேலும் வெற்றியடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version