அண்மை நாட்களாக நாகபட்டினம் – காரைக்கால் கடற்றொழிலாளர்களின் இழுவைப்படகுகள் கரையை அண்மித்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று 08 காலை 10:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வளத் திணைக்கள
உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை சந்தித்து கலந்துரையாடினர்.
கடலில் போராட்டம்..
இதன் போது கடலில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்த
வண்ணம் உள்ளது.
இதனை அரசாங்கமாக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் தவறின்
நாங்கள் கடலில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனாலும் அடையாளமாக எதிர்வரும் வெள்ளிக் கிழமை யாழ் மாவட்ட மீனவர்கள்
ஒன்றினைந்து நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை
ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம்.
மேலும், மாவட்டச் செயலகத்தை முடுக்கி
எமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
