Home விளையாட்டு இலங்கை வீராங்கனைக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்!

இலங்கை வீராங்கனைக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்!

0

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்  (ஐ.சி.சி) ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து இடம்பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஜூலை மாதத்திற்கான ஐ.சி.சி மாதத்தின் சிறந்த வீரர் விருதுகளுக்கான குறுகிய பட்டியலை பெயரிட்டுள்ளது.

ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது.

 சமரி அத்தபத்து 

கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த மூன்று சிறந்த பந்துவீச்சாளர்கள் ஐசிசியின் மாதத்திற்கான சிறந்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதில் ஐ.சி.சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜுலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளைகளில் இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து(Chamari Athapaththu) சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா(Smriti Mandhana) மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஐசிசியின் உத்தியோக பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து இவர்களுக்கு வாக்களிக்க முடியும் என ஐசிசி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version