முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், முன்னாள் பிரதமரின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச அல்லது ஊழல் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உரிய நடைமுறையை மீறி 2015 ஆம் ஆண்டில் எந்தவொரு அவசியமும் இல்லாமல் அரச வணிக கூட்டுத்தாபனம் ஊடாக 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை செலவு செய்து 50 தற்காலிக நெல் களஞ்சியங்களை இறக்குமதி செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
