Home இலங்கை சமூகம் செம்மணியில் துயரம்: சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி மீட்பு

செம்மணியில் துயரம்: சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி மீட்பு

0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றைய
தினம் புதன்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா
முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41
நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் , சிசுக்கள் உள்ளிட்ட 133
எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில்
147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகழ்வு பணிகள்  தற்காலிகமாக நிறுத்தம்

அதேவேளை கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம்
பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு
எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version