Home இந்தியா திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு பூட்டு – டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் எதிராலி

திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு பூட்டு – டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் எதிராலி

0

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.

நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் தடியடிக்குப் பின்னர், அங்கு காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இளைஞர்கள் மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://ibctamil.com/article/chennai-marina-beach-has-been-closed-to-the-public-1784871385

NO COMMENTS

Exit mobile version