Home இலங்கை சமூகம் சீனா நன்கொடை அரிசி கிளிநொச்சியை வந்தடைந்தது

சீனா நன்கொடை அரிசி கிளிநொச்சியை வந்தடைந்தது

0

இலங்கைக்கு சீன அரசாங்கம் வழங்கியுள்ள அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.

இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனரக வாகனமொன்றில் இன்று (16.07.2024) கிளிநொச்சி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவை கடற்றொழில் திணைக்களம் ஊடக 2,978 கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு
விநியோகம் செய்யப்படவுள்ளது.

அரிசி விநியோகம்

மேலும், எதிர்வரும் நாட்களில் பளை, கண்டாவளை, பூநகரி மற்றும் நாச்சிக்குடா ஆகிய நான்கு
கடற்றொழில் அலுவலகங்கள் ஊடக இந்த அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/china-donated-rice-arrives-in-kilinochchi-1721153220

NO COMMENTS

Exit mobile version