யாழில் நேற்றிரவு(6) இடம்பெற்ற இடி மின்னல் தாக்கத்தால் தேவாயலம் ஒன்று
பகுலியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/187 சங்குவேலி கிராம
சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்திலேயே இந்த
இடிமின்னல் தாக்கம் இடம்பெற்றது.
இந்த இடி மின்னல் தாக்கத்தால் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.
