திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீதி பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, குறித்த ஓட்டுனர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர்களுடன் சிலர் சேர்ந்து பொலிஸாரை வீடொன்றுக்குள் இழுத்து அடைத்து தாக்கியுள்ளனர்.
மேலும், இதன்போது பொலிஸாரின் கையடக்க தொலைபேசியை சேதப்படுத்தி, தகாத வார்த்தைகளைப்
பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மேலதிக தகவல் – ரொஷான்
