Home இலங்கை சமூகம் தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

0

அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே தெரிவித்துள்ளார்.

மீண்டும் சந்தையில் தேங்காய் விலை அதிகரித்து வருகின்றது.

பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 200 முதல் 220 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

தேங்காய் விலை

இந்நிலையில், தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சுமார்  தேங்காய் உற்பத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version