Home இலங்கை சமூகம் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் பெண்ணின் செயல்!

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் பெண்ணின் செயல்!

0

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள சம்பவம் பலரையும் சோகத்திற்குள்ளாகியுள்ளது.

கால்வாயில் அதிக நீர் ஓட்டம் இருந்ததால் அவர்கள் கால்வாய் கரையில் நடந்து சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞன் கால்வாயில் தவறி விழுந்தமையால், அவரை காப்பாற்ற முயற்சித்து கையை நீட்டிய போது அவருடைய காதலியும் கால்வாயில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான் திருமணம் செய்துக் கொள்ளவிருந்த காதலியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

என்னை காப்பாற்ற முயற்சித்த போதே அவர் இவ்வாறு காணாமல் போயுள்ளார் என உயிர் பிழைத்த காதலன் தெரிவித்த நிலையில் அங்குள்ள மக்கள் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு, 

 

NO COMMENTS

Exit mobile version