Home இலங்கை சமூகம் தொழிற்சங்க நடவடிக்கையால் ஏற்பட்ட விபரீதம் – தொடருந்தில் சென்ற நபர் பலி

தொழிற்சங்க நடவடிக்கையால் ஏற்பட்ட விபரீதம் – தொடருந்தில் சென்ற நபர் பலி

0

கொழும்பில் இருந்து புறப்பட்டு சென்ற தொடருந்தில் பயணித்த பயணி ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் பெம்முல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று(10) மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த தொடருந்தில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.


பணி புறக்கணிப்பு

நாடாளவிய ரீதியில் தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இன்று காலையும் மாலையும் சில தொடருந்து சேவைகளே இடம்பெறுகின்றன.

இந்தநிலையில், இன்று மாலை வேளையில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாகவே குறித்த நபர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/colombo-accident-today-one-person-death-1720620360

NO COMMENTS

Exit mobile version