Home இலங்கை சமூகம் அவசரமாக மூடப்படும் வீதிகள் – அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயணிக்குமாறு அறிவுறுத்தல்

அவசரமாக மூடப்படும் வீதிகள் – அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயணிக்குமாறு அறிவுறுத்தல்

0

கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் பகுதியில் மூடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு பயணிக்குமாறு அறிவுறுத்தல்

எனவே, கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் கேகாலை பிரதேசத்தில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவை தவிர வேறு காரணங்களுக்காக அந்த பகுதியினூடாகப் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version