Home இலங்கை சமூகம் நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்

நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்

0

இலங்கை கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய இழுவை படகை கைப்பற்ற முற்பட்டபோது இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் எமது கடல் பகுதிக்குள் நுழைந்து எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ச்சியாக அழித்து வருகிறது.

இதன் காரணமாக நாம் கடற்படையினருக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வரும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்ககளை கைது செய்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இந்திய இழுவைப் படகை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்” என கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

Source: https://tamilwin.com/article/condolences-to-the-navy-veteran-1719315827

NO COMMENTS

Exit mobile version