Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

முல்லைத்தீவில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

0

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு முள்ளியவளையில் ரைற்றன்
ஸ்போட்சினரால் மென்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த போட்டி, இன்றையதினம்(04.02.2025) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை வித்யா விளையாட்டு கழக மைதானத்தில் அணிக்கு 11 பேருடனும் 6 பந்து பரிமாற்றங்களுடனும் இந்தப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

10 அணிகள்

இதன்போது, 10 அணிகள் போட்டியில் பங்குபற்றியுள்ளன.

முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ. அமரசிங்க, முள்ளியவளை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி அமரதுங்க மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

NO COMMENTS

Exit mobile version