Home இலங்கை சமூகம் நடன வகுப்பிற்கு வந்த சிறுமிகளிடம் ஆசிரியரின் முறைகேடான செயல்

நடன வகுப்பிற்கு வந்த சிறுமிகளிடம் ஆசிரியரின் முறைகேடான செயல்

0

நடன வகுப்பிற்கு வந்த சிறுமிகளை தவறான முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நடன வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, ஹன்வெல்ல (Hanwella) காவல்துறையினரால் நேற்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஹன்வெல்ல – படேவெல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய திருமணமான நடன வகுப்பு ஆசிரியை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை

சந்தேகநபர் சிறுமிகளை தனது நடன வகுப்பிற்கு அழைத்துச் சென்று தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளதுடன், வாட்ஸ்அப் செயலியின் ஊடாக
ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளமையும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சந்தேகநபர் தொடர்பில் தலங்கம மற்றும் நவகமுவ காவல்துறையினருக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹன்வெல்ல காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/dance-class-teacher-arrested-for-abusing-girls-1720911740

NO COMMENTS

Exit mobile version