Home இலங்கை சமூகம் புத்தளத்தில் கடற்கரை பகுதியிலிருந்து சடலம் மீட்பு

புத்தளத்தில் கடற்கரை பகுதியிலிருந்து சடலம் மீட்பு

0

புத்தளம் – தொட்டுவாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடாமடுவெல்ல கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (28.03.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக தொட்டுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலம்

இந்த நிலையில் சடலமானது மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொட்டுவாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version