Home இலங்கை சமூகம் மரண தண்டனையிலிருந்து மீண்ட 80 வயது பெண்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

மரண தண்டனையிலிருந்து மீண்ட 80 வயது பெண்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

0

நாட்டில் 80 வயதுடைய பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி அம்பலாந்தோட்டையில் உள்ள மோதரபிலிவெலவில் மீகஹலந்ததுரகே ஜெயசேனவின் மரணத்திற்கு காரணமானதாக சிறிமா எதிரிசூரிய என்பவர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

விதித்த தண்டனை 

இது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 296 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தநிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் மரண தண்டனையை, கொலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் தொடர்பாக இரண்டு நேரில் கண்ட சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக நிலைநிறுத்த முடியாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

சஹான் வீரசிங்க மற்றும் தருஷி கமகே ஆகியோருடன் மூத்த வழக்கறிஞர் தர்ஷன குருப்பு என்பவர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version