தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை படிப்படியாக நடத்தப்பட்டு 2029 ஆம் ஆண்டுக்குள் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன(Dr. Madura Seneviratne) தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இன்று (24) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புலமைப்பரிசில் உதவித்தொகை
துணை அமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் தனது கருத்துக்களை பின்வருமாறு தெரிவித்தார்.
“நாங்கள் புலமைப்பரிசில் உதவித்தொகை பற்றிப் பேசினோம். இந்தத் திட்டம் தரம் 05 ற்காக செயற்படுத்தப்படும்போது பெற்றோர்கள் இனி தமது குழந்தையை நகரத்திற்கு அழைத்துச் செல்ல விரும்ப மாட்டார்கள். அவர்கள் இனி அதிகாலை 04 மணிக்கு எழுந்து ஒரு பெரிய புத்தகப் பையுடன் செல்ல வேண்டியதில்லை.
எனவே இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும். 2028 ஆம் ஆண்டுக்குள், நாங்கள் சில மதிப்பாய்வுகளைச் செய்வோம், 2029 ஆம் ஆண்டுக்குள், புலமைபரிசில் பரீட்சை குறித்து மீண்டும் ஒரு முடிவை எடுப்போம் என தெரிவித்தார்.
Source: https://ibctamil.com/article/decision-on-scholarship-in-2029-1753351866
