Home இலங்கை கல்வி வவுனியாவில் அதிபர் ஆசிரியர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றாேர்

வவுனியாவில் அதிபர் ஆசிரியர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றாேர்

0

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி வவுனியா(Vavuniya) மாவட்டத்தில் பல
பாடசாலைகளிலும் பாடசாலை நேரத்தின் பின்னரும் அதிபர் ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றாேரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பாடசாலைகளுக்கு முன்பாக பதாதைகளை
ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகள்

இதன்பாேது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ்
கலவன் பாடசாலை, விபுலானந்தா கல்லூரி, புதுக்குளம் மகா வித்தியாலயம்
என்பவற்றுக்கு முன்னால் பாடசாலையில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்
இணைந்து சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இந்த
ஆர்ப்பாட்டத்தில் முன்வைத்துள்ளனர்.

மேலும், அண்மையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரால் கொழும்பில்
முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும்
நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டமையை ஆர்பாட்டகாரார்கள்
கண்டித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version