Home இலங்கை சமூகம் ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

0

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 6ம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் தேசிய ஆட்பதிவு திணைககளத்தின் தலைமையக் காரியாலயம் மற்றும் பிராந்திய காரியாலயங்களில் ஒருநாள் சேவை மற்றும் ஏனைய சேவைகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல்களுக்கான ஏற்பாடுகளின் காரணமாக மே 5, 6 மற்றும் 7 திகதிகளில் ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் 24 மணி நேர சேவையை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இது குறித்து அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version