Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்கு ஜனாதிபதி ரணில் வெளியிட்ட நற்செய்தி

விவசாயிகளுக்கு ஜனாதிபதி ரணில் வெளியிட்ட நற்செய்தி

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) “ ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் விவசாயிகளுக்கு சலுகைள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நெற் பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரம் அல்லது இதர தேவைகளைப் பூர்த்தி செய்ய நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 25,000 ரூபா நேரடியாக வைப்பிலிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, விவசாயிகளுக்கு போகத்திற்கு போகம் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

100,000 தொழில் வாய்ப்பு

இதேவேளை, வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு மற்றும் ‘உறுமய’ மற்றும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை செயல்படுத்தல் போன்ற சலுகைகளும் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முதல் கட்டமாக, 100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/direct-deposit-to-farmer-s-bank-accounts-ranil-1724922750

NO COMMENTS

Exit mobile version