தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர்களுக்கும் தலைமைகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
கலந்து கொண்டோர்
குறித்த சந்திப்பானது, நேற்றைய தினம் (11.05.2025) யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில்
அமைந்துள்ள கிறிஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் தமிழ் தேசிய பேரவையின் தலைவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, தமிழ்த் தேசிய பேரவையின் தேர்தல் கால சவால்கள், எதிர்கால
செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தலைவர் சிறீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
