யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்றையதினம் 25 கிராம் கேரளக் கஞ்சா மற்றும் 20
போதை மாத்திரைகள் என்பவற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவருகிறது.
காவல்துறை புலனாய்வு பிரிவு
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படைதியில், யாழ்ப்பாணம்
போதைத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் அவர்களை
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.
