Home உலகம் ஜப்பானின் தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

ஜப்பான் (Japan) தலைநகர் டோக்கியோவில் (Tokyo) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது இன்று (4.7.2024) மதியம் 12.12 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானதாக சீன (China) நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை  

இந்த நிலநடுக்கம் 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவின் 23 பிரதேசங்களில் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தநிலையில், உயிரிழப்பு மற்றும் சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

மேலும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Source: https://ibctamil.com/article/earthquake-in-tokyo-japan-1720095192

NO COMMENTS

Exit mobile version