Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

0

கிளிநொச்சி- அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியம்குளம் பகுதியில்
மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெல்வயலுக்கு போடப்பட்ட மின்குமிழ் வயர்
நெல் அறுவடை செய்த பின்பு வயலுக்கு வைக்கப்பட்ட நெருப்பின் மூலம் அறுந்த
நிலையில் மின்சாரம் தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில்,  86 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம்
தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version