Home இலங்கை சமூகம் யாழில் வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

யாழில் வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

0

யாழில் (Jaffna) மூதாட்டி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொண்டுள்ளார். 

குறித்த சம்பவமானது நேற்று (22) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை

சம்பவத்தில், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூதாட்டி உறக்கம் இன்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தனக்கு தானே தீ மூட்டி உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

NO COMMENTS

Exit mobile version