Home இலங்கை சமூகம் செட்டிகுளம் – மன்னார் வீதியில் டிப்பருடன் யானை மோதி விபத்து

செட்டிகுளம் – மன்னார் வீதியில் டிப்பருடன் யானை மோதி விபத்து

0

செட்டிகுளம் – மன்னார் வீதியில் டிப்பருடன் மோதுண்ட யானை ஒன்று காயமடைந்த
நிலையில் வீதியருகில் விழுந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது , இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வாகனம் மோதி விபத்து

“வவுனியா, செட்டிகுளம் – மன்னார் வீதியில் உள்ள ஆண்டியாபுளியங்குளம் பகுதியில்
வீதியில் நின்ற யானை ஒன்றுடன் அவ் வீதியால் வந்த டிப்பர் ரக வாகனம் மோதி
விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த யானை வீதியோரத்தில் உள்ள நீர் உள்ள குழி ஒன்றில்
காயத்துடன் விழுந்து கிடந்து உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version