Home சினிமா கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி அதிர்ச்சி ப்ரொமோ

கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி அதிர்ச்சி ப்ரொமோ

0

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மா கொடுத்த புகாரில் ஈஸ்வரி கைதாகி சிறைக்கு சென்று இருக்கிறார். அவருக்கு எதிராக ராதிகா கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என அவரும் அவரது அம்மாவும் காத்திருந்தனர்.

ஆனால் இறுதி நேரத்தில் ராதிகா மகள் மயூவை கோர்ட்டுக்கு அழைத்து வந்து சாட்சி சொல்ல வைக்கிறார் பாக்யா. அதனால் ஈஸ்வரி அந்த வழக்கில் இருந்து விடுதலை ஆகி வீட்டுக்கு வருகிறார்.

கோபியை தலைமுழுகும் ஈஸ்வரி

ஈஸ்வரி வீட்டுக்கு வந்த பிறகு அவரை சந்திக்க வருகிறார் கோபி. அவர் மன்னிப்பு கேட்டாலும் ஈஸ்வரி கடும் கோபத்தில் அவரை திட்டுகிறார்.

எனக்கு ஒரே ஒரு மகள் தான். அது பாக்யா மட்டும் தான். கோபி என ஒரு மகன் எனக்கு பிராகாவே இல்லை. இன்றோடு உன்னை தலைமுழுகுகிறேன் என ஈஸ்வரி தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றுகிறார்.

ப்ரோமோ இதோ.. 

Source: https://cineulagam.com/article/eswari-shocking-decision-baakiyalakshmi-promo-1721140321

NO COMMENTS

Exit mobile version