தனியார் வகுப்புக்கு சென்ற மகளை அழைத்துச் செல்லச் சென்ற தந்தை ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளதாக வாதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வாதுவ மகாவிஹார வீதியில் வசிக்கும் 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சுது தேவகே லலித் துஷார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னால் வந்த கார் மோதி விபத்து
பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்றபோது, பின்னால் வந்த கார் அவர் மீது மோதி மின்கம்பத்தில் மோதியது.
காரில் மோதிய நபர் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
