Home இலங்கை சமூகம் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

0

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில், மில்லக்கந்த பகுதிக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை (Kalutara) மாவட்டத்தின் இங்கிரிய, மத்துகம, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரத்தினபுரி (Ratnapura) மாவட்டத்தின் அயகம, எஹெலியகொட, எலபாத்த, கிரிஎல்ல, குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல்

நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மறுஅறிவித்தல் வரையில் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அரபிக்கடல் பிராந்தியத்தில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 

Source: https://ibctamil.com/article/flash-and-landslide-warning-issued-to-people-1720410758

NO COMMENTS

Exit mobile version