Home இலங்கை சமூகம் மக்களுக்கு சுமையாகிய முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பு! விளக்கமளிக்கும் அநுர தரப்பு

மக்களுக்கு சுமையாகிய முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பு! விளக்கமளிக்கும் அநுர தரப்பு

0

இந்த நாட்டில் மக்கள் பெரிதும் துன்பப்படும் பகுதிகள் இருப்பதாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளில் முன்னாள் ஜனாதிபதிகளைப் பராமரிப்பது மக்களுக்கு பெரும் சுமையாகும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் (Anuradhapura) வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளைப் பொதுப் பணத்தில் பராமரிப்பதை நிறுத்துவதும், இதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை மாற்றுவதும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பதும் தற்போதைய அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதிகள் ஓய்வு

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நமக்கு வாழ்வதற்கு அரசியல் அல்ல, ஒரு நாடு இருக்க வேண்டும். உலகில் எங்கும் இதுபோன்ற வசதிகள் இல்லை.

ஜனாதிபதிகள் ஓய்வு பெறும்போது, ஏன் இன்னும் மக்களிடம் பராமரிக்க ஒப்படைக்கப்படுகிறார்கள்? அவை மக்களுக்கு சுமையாகின்றன. நாட்டு மக்கள் அவற்றைச் பராமரிக்க முடியாமல் தினறுகின்றனர். 

நமது நாட்டில் இன்னும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் பகுதிகள் உள்ளன. எனவே, பொதுப் பணத்தில் இந்தப் பராமரிப்பை நிறுத்துவோம். ஜனாதிபதிகளின் சலுகைகளையும் அதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களையும் மாற்றுவோம்.

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் ரத்து செய்வோம். மக்களுக்கு நேரம் கிடைக்கும்போது, இவர்களும் அதைப் பெறுவார்கள்.” தெரிவித்துள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் திருவிழா

https://www.youtube.com/embed/1vctQnhlepk

NO COMMENTS

Exit mobile version