Home இலங்கை குற்றம் பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த நபர் தப்பியோட்டம் – அதிரடி காட்டிய பொலிஸார்

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த நபர் தப்பியோட்டம் – அதிரடி காட்டிய பொலிஸார்

0

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரெஞ்சு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்காலையில் விபத்து ஒன்றை ஏற்படுத்திய பின்னர் தப்பிச் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் மீது ஜீப் வண்டியில் பயணித்த பிரெஞ்சு பிரஜை ஒருவர் மோதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரெஞ்சு பிரஜை

விபத்தை ஏற்படுத்தியதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 40 வயதுடைய ஜயசேகர கிரிஷாந்த என்பவர் சிகிச்சைக்காக தங்காலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், தப்பிச் சென்ற பிரெஞ்சு பிரஜையை கைது செய்துள்ளனர்.   

Source: https://tamilwin.com/article/france-man-arrested-in-tangalle-road-accident-1724337850

NO COMMENTS

Exit mobile version