Home இலங்கை பொருளாதாரம் எரிபொருள் விலைக் குறைப்பு தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

எரிபொருள் விலைக் குறைப்பு தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

0

உலக சந்தையில் தற்போது குறைந்திருக்கும் எரிபொருள் விலை,  இதே நிலையில் தொடர்ந்தால் அடுத்த ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டெம்பர் மாதமளவில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடியதாக இருக்கும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறையும் விலை.. 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஏற்கனவே, எரிபொருளுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றது.  ஒரு லீட்டர் டீசல் மற்றும் ஒரு லீட்டர் பெட்ரோல் ஆகிவற்றிற்கு 100 ரூபாய் மற்றும் 20 ரூபாய் என நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது. 

பொதுச் சந்தையில் பொருட்களை வாங்குவது பொல எரிபொருளை உடனடியாக கொள்வனவு செய்ய முடியாது. முறையான கேள்வி மனு நடைமுறையின் படி ஒப்புக் கொள்ளப்பட்ட விலையில் அதனைப் பெற வேண்டும்.

எனவே, தற்போது உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தொடர்ந்தும் நீடித்தால், ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டெம்பர் மாதமளவில் பொதுமக்களுக்கு எம்மால் நிவாரணம் வழங்க முடியும்.  எரிபொருளின் விலையை கூடிய விரைவில் குறைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

Source: https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1781962578

NO COMMENTS

Exit mobile version