Home முக்கியச் செய்திகள் எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

0

“உலக சந்தை நிலவரங்களில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது” என மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எரிசக்தி துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கு ஒரு சுயாதீனமான ஒழுங்குமுறை அமைப்பின் அவசியத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உலக சந்தை நிலவரங்கள்

மேலும் இந்த சுயாதீன அமைப்பை நிறுவுவதன் நோக்கம், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள், எல்பிஜி, எல்என்ஜி மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் தரம், விநியோகப் போட்டி மற்றும் விலைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.

வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான மற்றும் நியாயமான விலையில் பொருட்களை வழங்க இது உதவும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதற்கான பிரதான கட்டமைப்பை தயாரிப்பதற்கு தேவையான தகவல்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், உலக சந்தை நிலவரங்கள் மற்றும் எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை உணர்ந்து, அடுத்த 6 மாதங்களுக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்: பின்னணியில் தொடரும் மர்மம்

எரிபொருளின் விலை

இம்மாதம் 30ம் திகதியும், அடுத்த மாதம் 13ம் திகதியும் மேலும் இரண்டு மாதங்களுக்கு டெண்டர் விடப்படும்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான தேவையான எரிபொருளின் தவணைகள் நிறைவு செய்யப்படும்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என்பதையும் குறிப்பிட வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version