Home இலங்கை சமூகம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : வெளியானது அறிவிப்பு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : வெளியானது அறிவிப்பு

0

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.

325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

 305 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 299 ரூபாவாகும்

 விலைகளில் மாற்றம் இல்லை

எனினும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியன ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாய்க்கும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 185 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version