Home இலங்கை கல்வி க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள்

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு 478,182 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 398,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version