யாழில் (Jaffna) கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று அரசடி வீதி – இருபாலை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
35 வயதுடைய கிட்ணசாமி கிருபைராஜா என்ற அரச ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்துள்ளார்.
நோயின் வீரியத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் நேற்றையதினம் (3) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
