யாழ்ப்பாணத்திற்கு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள்
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் 3729 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை தினம்(03.12.2025) 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம்(04.12.2025) 2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
