திருகோணமலை பிரதான மரக்கறி வியாபாரிகளின் சந்தையில் எழுந்துள்ள பிரச்சினைகள்
தொடர்பாக இன்று (22.12.2025) கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அதன்படி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல்
இதில் தற்போதைய நிலையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் குறித்து
கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைத் தீர்ப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயல்படுவது மற்றும்
நீண்டகால தீர்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் சந்தை அபிவிருத்தி
மற்றும் அதற்காக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்
விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான்
அக்மீமன உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கது.
