Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: 25,000 ரூபாய் உர மானியம்!

விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: 25,000 ரூபாய் உர மானியம்!

0

நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25,000 உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (3) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)  விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து அனைத்து அதிகாரிகளுடனும் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலை நடாத்திய பின்னர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இன்று காலை ஜனாதிபதி விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்தார்.அனைத்து அதிகாரிகளுடனும் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உர மானியம்

அங்கு உரங்களை கொள்வனவு செய்யும் போது QR குறியீட்டு முறையை தயார் செய்யுமாறு விவசாயிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அப்போது நமக்குத் தகவல் கிடைக்கும்.

அது அறிவிக்கப்பட்டவுடன், அது தொடர்பான தொகை எதிர்காலத்தில் வங்கி முறைக்கு செல்லும்.”

25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

முன்பணமாக ரூ.15,000 செலுத்தி தேர்தலுக்குப் பிறகு ரூ.10,000 கொடுக்கலாம்.

25,000 கூட கொடுப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

“பெரும்போகத்தில் பயிரிடப்படும் 8 லட்சம் ஹெக்டேர்களுக்கு உரம் வழங்க அரசுக்கு 20 பில்லியன் ரூபாய் செலவாகிறது.

விவசாயிகளின் தனிப்பட்ட கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது”என்றார்.

NO COMMENTS

Exit mobile version