Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

0

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள், மதிப்பீடு ஆரம்பித்து 40 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று(08) ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம்(Department of Examinations) முன்னர் அறிவித்திருந்தது. 

இதன்படி, விடைத்தாள் திருத்தும் செயல்முறை இன்று(08) முதல் ஜனவரி 12ஆம் திகதி  வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார். 

விடைத்தாள் மதிப்பீடு

மதிப்பீடுகள் நிறைவடைந்த 40 நாட்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம்  15ஆம் திகதி நடைபெற்றது.

244,092 மாணவர்கள்  சிங்கள மொழி மூலமும்,  79,787 மாணவர்கள்  தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். 

முன்னதாக இந்த பரீட்சை வினாத்தாளில் மூன்று வினாக்கள் வெளியில் கசிந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம் வெளியிட்டு போராட்டங்களை நடத்தியிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/grade-5-exam-answer-script-evaluation-begins-today-1736320476

NO COMMENTS

Exit mobile version