Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்

0

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள்

இந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது.

இந்தநிலையில், பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

Source: https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-2026-1787189330

NO COMMENTS

Exit mobile version