Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது – சாதனை படைத்த 56 000 மாணவர்கள்

தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது – சாதனை படைத்த 56 000 மாணவர்கள்

0

புதிய இணைப்பு 

2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட (Cut-off Mark) அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பரீட்சைக்கு மொத்தம் 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் 289,867 மாணவர்கள் மாத்திரமே பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு  

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு   

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது

பரீட்சைக்கான முடிவுகள்

இதற்கமைய, www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் தேர்வு ஒகஸ்ட் 9 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 தேர்வு மையங்களில் இடம்பெற்றுள்ளன.

சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் உட்பட மொத்தம் 294,089 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் பங்கேற்றனர்.

YOU MAY LIKE THIS VIDEO..


Source: https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756

NO COMMENTS

Exit mobile version