கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஜா-எல மற்றும் கட்டுநாயக்க வெளியேறும் இடங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் நெருக்கடி
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் பல்வேறு இடங்களில் அதிக தொகையான மக்கள் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், விழாக் காலத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் வியாபாரங்கள், களியாட்டங்கள் என்பன காரணமாகவும் அதிக வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
